அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ரத்னம் நடராஜன் அவர்களின் 02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டான கிரிகைகள் இன்றைய தினம் (03) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
ஆறவில்லை எங்கள் மனம்
நேற்றுப்போல் உள்ளதப்பா நினைக்கும் போதெல்லாம்
ஏற்க முடியவில்லை ஏங்கித் தவிக்கின்றோம்!
கண்ணுக்குள் ஒளியாய்
நெஞ்சத்தில் நினைவாய்
என்றும் எங்களோடு எங்களின் இறைவனாய்
என்றும் எங்களை வழி நடத்த
வேண்டுகிறோம்!
-குடும்பத்தினர்-