Latest News
Home / விளையாட்டு / மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணமாகின்றது இலங்கை அணி!

மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணமாகின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடர் மார்ச் மாதம் 3ஆம், 5 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள்தொடர் மார்ச் மாதம் 10ஆம், 12ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் மாதம் 21ஆம் திகதியும், 2 ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 29ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *