Latest News
Home / இலங்கை / மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தனினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு நகரத்தில் பிரமாண்டமான நூலகம் அமைப்பதற்கான பணிகள் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்காக சுமார் 20 கோடி ரூபா நிதியை செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 9 கோடி ரூபா செலவில் ஆரம்ப பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் இதன் அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் இந்த கட்டிட பணிகளை பூர்த்தி செய்வதில் சந்திரகாந்தன் பெரும் முயற்சி எடுத்து செயற்பட்டு வருகின்றார். இவரது முயற்சியின் காரணமாக கரடியனாறு விவசாய பயிற்சி பண்ணை புனரமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று குடும்பிமலை பகுதிக்கு அருகில் உள்ள மாவெட்டுவான் அணைக்கட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மீண்டும் ஆரம்பித்ததை இட்டு பிரதேச மக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *