மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் P.மோகனதாஸ், ஆலையடிவேம்பு முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.S.M.கரீமா என பலர் கலந்து கொண்டிருந்தனர்.