மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற அம்பாள் பாலர் பாடசாலை, கனகதுர்க்கா, விவேகானந்தா, விநாயகர் என நான்கு பாலர் பாடசாலைகள் இணைந்து மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (15) பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய்,
ஆலையடிவேம்பு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோத்தர் ஹரீமா, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திரு.மணிவண்ணன், ஓய்வு நிலை அதிபர் திரு வி.கனகரெட்ணம் மற்றும்
கோளாவில் மாரியம்மன் கோவில் தலைவர் முன்னாள் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.