Latest News
Home / இலங்கை / பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வற் வரி விதிப்பினால் பாடசாலை பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ள நிலையில், நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமே வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. வற் வரி மூலம் பெறப்படும் வருமானம் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் பாடசாலை பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் பாடசாலை பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *