Latest News
Home / ஆலையடிவேம்பு / பாடசாலைகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளில் சிரமதானங்கள்….

பாடசாலைகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளில் சிரமதானங்கள்….

ஜினுஜன்,கிஷோர்

இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் முழுமையாக ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் அனைத்திலும் பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு திருநாவுக்கரசு வித்தியாலயம், அன்னை சாராத வித்தியாலயம், ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை என அனைத்து பாடசாலைகளும் பாடசாலைகளிலும் இன்றையதினம் இடம்பெற்று இருந்தன.

இந்த சிரமதான நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் பங்குகொண்டு சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.

 

 

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *