Latest News
Home / இலங்கை / நாட்டின் நலனும் அபிவிருத்தியும் சிறார்களின் கைகளிலேயே உள்ளது – ஜனாதிபதி

நாட்டின் நலனும் அபிவிருத்தியும் சிறார்களின் கைகளிலேயே உள்ளது – ஜனாதிபதி

ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்களாகிய எதிர்கால  சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாண்டின் சிறுவர் தின தேசிய வைபவத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதே நோக்கமாக அமைய வேண்டும். அந்த எதிர்பார்ப்புடனே பிள்ளைகளைப் பாதுகாப்போம்” என தெரிவித்துள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *