-காந்தன்-
நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கினை முன்னிட்டு (26/09/2022) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து தேவாதிகள் கும்பமானது பாண்டிருப்பு பிரதான வீதி வழியாக இந்து மகா சமுத்திரத்திற்கு சென்று கடல் நீர் எடுத்து மந்திர உட்சாடனங்களுடன் அம்மனை அழைத்து நற்பிட்டிமுனையில் உள்ள ஸ்ரீ கணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள அம்மன் பேழையினை எடுத்துக் கொண்டு நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வருகைதந்து திருக்கதவு இனிதே திறக்கப்பட்டது.