Latest News
Home / இலங்கை / தேசிய உள நலப்பிரிவு பணிப்பாளரின் பங்கேற்புடன் கல்முனை பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று….

தேசிய உள நலப்பிரிவு பணிப்பாளரின் பங்கேற்புடன் கல்முனை பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று….

இன்று 2022.11.30 ஆம் திகதி கல்முனை பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய உளநலப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரொஹான் ரத்ணாயக்க மற்றும் வைத்தியர் சிரோமி,CCP பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ. வாஜித் அவர்களும் கல்முனைப் பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே. நௌபல் அவர்களும் பணிமனையின் பிரிவுத்தலைவர்களும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகளும் உள மருத்துவ சமூகப்பணியாளர் எம்.ஆர்.எம். ஹமீம் அவர்களும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

முதற்கட்டமாக சம்மாந்துறை, திருக்கோயில், நிந்தவூர், நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்சமூக ஆதரவு நிலையங்களில் பங்குதாரர்களாக பொலிஸார் மற்றும் கிராம நிலதாரிகள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சட்ட உத்தியோகத்தர்கள் உளவியலாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள பிரஜைகள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் இந்நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒவ்வொரு தனிமனிதனதும் சுய கௌரவமும் பின்பற்றப்படவும் அரசாங்கத்தின் கொள்கைகளை இலகுவாக சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லவும் இந்நிலையங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்யும் என தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய உள நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே. நௌபல் அவர்களினால் இந்நிலையங்களின் அமைவுச்சேர்க்கை மற்றும் பணிகள் தொடர்பில் பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் இந்நிலையங்களின் செயற்பாடுகளிலுள்ள தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஸ்பின் அவர்களினால் இக்கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜேகே.யதுர்சன்

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *