ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/ திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக புதிய நீர் ஏற்றும் இயந்திரம், புதிய குழாய் இணைப்பு வசதி செயற்பாடுகள் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு நேற்றய தினம் (06.12.2022) மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்ட செயற்பாட்டை முன்னெடுக்க பாடசாலையின் அதிபர் சுரேஸ் ஸ்டீபன்சன் அவர்களினால் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் 66,000/- ரூபாய் பெறுமதியான குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த செயற்பாட்டுக்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் அவர்கள் காரணமாக இருப்பதுடன் அன்னாரின் உதவிக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.