அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த சனிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
குறித்த பாடசாலையில் சில மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சமூக ஊடகங்கள் ஊடாக வெளிவந்த தகவலையடுத்து இது குறித்து திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கமைய பெண்கள் சிறுவர்கள் பிரிவின் தலைமையிலான விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகள்
பொலிஸ் நிலையத்தில் கடிதம் மூலம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து.
விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குறித்த ஆசிரியரை திருக்கோவில் பொலிசார் கடந்த (12) திகதி கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் கைது செய்யபட்ட குறித்த ஆசிரியரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(ஜேகே.யதுர்சன்)