கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் லோ.சரோஜாதேவி (பவானி) ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து ஆசிரியருக்கு ஆசீர்வாதம் வழங்கியதோடு மாணவர்களுக்கு மகா சிவராத்திரியின் பெருமை பற்றி சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார்.
மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோளாவில் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் லோ.சரோஜாதேவி (பவானி) ஆசிரியைக்கு பரிசுகள் நினைவு சின்னங்கள் என்பனவும் வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.