இலங்கையில் மேலும் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,860 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 115,536 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.