Latest News
Home / இலங்கை / காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன்

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன்

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு!
சபையில் இடித்துரைத்த சிறீதரன்

நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார், யார் பகிர்ந்தார் என்ற உண்மைத்தன்மையை ஆராயாது காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறில் மீது பைசல் காசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைப்பது நாகரீகமற்ற செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை(04/08/2021) இடம்பெற்ற மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார், யார் பகிர்ந்தார் என்ற உண்மைத்தன்மையை ஆராயாது அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் மீது பைசல் ஹாசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைக்கின்றார். இது உண்மையிலே நாகரீகமற்றது.

சமூக வலைத்தளமொன்றில் வந்த விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராயாமல் ,அதனை ஜெயஸ்சிறில் தான் வெளியிட்டாரா அல்லது வேறு யாரும் ஒருவர் வெளியிட்டதை பகிர்ந்தாரா என்பதனைக்கூட ஆராயாது ,குற்றச் சாட்டுக்களை இந்த உயரிய சபையில் வெளியிட வேண்டாமென பைசல் ஹாசிம் எம்.பி. யிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *