அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை 03.00 மணியளவில் காட்டு யானை ஒன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நுழைந்து அட்டகாசம்.
யானை தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான 32 வயது (திருமதி.சிவகரன் சுலச்சனா) குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரண்டு பிள்ளைகளின் மூத்த பிள்ளைக்கு 11 வயதும், மற்றய பிள்ளை 05 வயதும் உடையவர் ஆவர்.
மேலும் 03 வீடுகளுக்கு பாரிய சேதமாக்கியுள்ளதுடன் யானை தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவங்களால் சோகத்தில் கண்ணகி கிராம மக்கள் காணப்படுவதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் T.நவநீதன் அவர்கள் மக்களுக்கு உறுதுணையாகவும் காணப்படுவதாகவும்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.