சஜித்தை வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என அறிய முடிகின்றது.
இருப்பினும் இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை மறுதினம் கூடவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.