Latest News
Home / இலங்கை / எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது – ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு

எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது – ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *