Latest News
Home / இலங்கை / “இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லிணக்கத்திற்காக உரத்து பேசுவோம் உண்மை பேசுவோம்” வீதி நாடகம் திருக்கோவில் பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில்….

“இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லிணக்கத்திற்காக உரத்து பேசுவோம் உண்மை பேசுவோம்” வீதி நாடகம் திருக்கோவில் பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில்….

ACTED நிறுவனத்தின் இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் எனும் செயற்திட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள திருக்கோவில் 03 கோவிலூர் சகவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் “இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லிணக்கத்திற்காக உரத்து பேசுவோம் உண்மை பேசுவோம்” எனும் கருப்பொருளில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான வீதி நாடகம் திருக்கோவில் பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இன்று (09/02/2023) நடைபெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக எமது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. மோகனராஜா அவர்கள், கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு.கந்தசாமி, தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸி யுரேமினி, திருக்கோவில் 03 கிராம உத்தியோகத்தர் திரு. சுகிர்தராஜன் திருக்கோவில் மெடிஸ் மிசன் தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர் திரு.சுமன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஜே.கே.யதுர்சன்.

 

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *