இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று கொழும்பு கோட்டைக்கும், பொலன்னறுவைக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
‘புலதிசி’ என அழைக்கப்படும் இந்த கடுகதி ரயில் ஆனது 10 புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிருத்தப்படும்.
அத்துடன் சுமார் 05.23 மணி நேரங்களில் தனது பயணத்தை முடித்துகொள்ளும் என இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.