இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்திய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வுகள் இன்றைய தினம் (22.05.2022) காலை 08.30 மணியளவில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
குறித்த குருபூசை நிகழ்வுகள் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை திரு.கந்தசாமி மேனன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆன்மீக அதிதிகள், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே ஜெகதீஸன் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே.அதிசயராஜ் அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.