Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு MOH பிரிவில் இரண்டாம் கட்ட தடுப்பூசியின் முதலாம் நாளாகிய இன்று வினைத்திறனாக மூவாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

ஆலையடிவேம்பு MOH பிரிவில் இரண்டாம் கட்ட தடுப்பூசியின் முதலாம் நாளாகிய இன்று வினைத்திறனாக மூவாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

-விதுர்சன்-

எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மாத்திரமே என்கின்ற நிலையில்.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (29) முதல் இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பட்ட 5,000 சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையின் முதலாம் நாள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் மேற்பார்வையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இன்றைய தினம் மூவாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் பயனாளர்களுக்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம், இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய நான்கு நிலையங்களில் பிரதேச காதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் செலுத்தப்பட்டது.

இன்றைய தினம் பிரிவு ரீதியாக ஒரு சில ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு மாத்திரம் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு அறிவித்தல் வழங்கப்பட்டு இருந்த நிலையில்

தடுப்பூசி வழங்கும் திட்டத்தை வினைத்திறனாக்கவும் மேலும் பிரதேச மக்கள் தங்களுக்கு வசதியான நேர கலப்பகுதில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் எனும் நோக்குடனும்

பிரிவு ரீதியின்றி தங்களுக்கு விரும்பிய நிலையங்களில்  தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்களால் தீர்மானம் மாற்றப்பட்டு இன்றைய தினம் வினைத்திறனாக தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினமும் மக்கள் பிரிவு ரீதியின்றி தங்களுக்கு விரும்பிய நிலையங்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *