Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு.
மாரி மழைக்காலம் மிக அண்மித்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் மழைக்கால நோய்க் காவிகள் பெருகுவதற்குச் சாத்தியமுள்ள இடங்களையும், அலுவலக அறைகளில் தேங்கியிருக்கக்கூடிய பாவனைக்குதவாத பொருட்களையும் சுத்தப்படுத்தும் மாபெரும் சிரமதான நிகழ்வொன்று இன்று (11) காலை பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து முன்னெடுத்திருந்த இச்சிரமதானத்தின்போது அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் சேகரிக்கப்பட்ட பாவனைக்குதவாத பொருட்கள் அனைத்தும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உதவியோடு அவர்களது திண்மக் கழிவுகளைச் சேகரிக்கும் இயந்திரத்தின் மூலம் வெளியேற்றப்பட்டதுடன், அலுவலக வளாகத்தில் தேங்கியிருந்த குப்பைக்கூழங்கள் சேகரிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், புற்தரைகளும் மேடு பள்ளங்களும் அதற்கான உபகரணங்களைப் பயன்படுத்தி உத்தியோகத்தர்களால் சீரமைக்கப்பட்டன.

நன்றி – Divisional Secretariat Alayadivembu முகநூல் பக்கம்

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *