-ஹரிஷ்-
ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் P.மோகனதாஸ், ஆலையடிவேம்பு முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.S.M.கரீமா, ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் நிதர்சன், அன்னை சாரதா கலவன் பாடசாலையின் அதிபர் கோமளம் துளசிநாதன் மற்றும் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் ஜெகநாதன் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.