Latest News
Home / இலங்கை / அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!

நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பெரசிட்டமோல் மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *