வி.சுகிர்தகுமார்
இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை ஒரு மணி தொடக்கம் 3 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிவதுடன் இதனை கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று (16)உறுதி செய்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 11ஆம் திகதி நள்ளிரவை தாண்டிய நிலையில் குறித்த வீட்டின் பெண் சமையலறையில் வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது வேலைகளை முடித்த பின்னர் நித்திரை கொள்வதற்காக தனது அறைக்கு திரும்பியுள்ளார்.
இதேநேரம் குறித்த அறைக்குள் நுழைந்த கள்வன் அங்கிருந்த சகல பொருட்களையும் ஆராய்ந்த பின்னர் அங்கிருந்த நகைகளை களவாடி சென்றுள்ளமை 12ஆம் திகதி அதிகாலை தெரியவந்தாகவும் இது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகளையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆயினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் திருடர்கள் யாரும் அகப்படவில்லை என்பதுடன் இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.