முதலாம் வருட நினைவஞ்சலி
அமரர் ஞானமுத்து கனகம்மா
மலர்வு- 1944.04.29
உதிர்வு- 2020.06.12
எங்கள் அன்புத் தெய்வமே …!
எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டொன்று கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள்
அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா. உங்களது அன்பும்,
நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான். இக் கணமும் உங்கள்
நினைவால் கலங்குகின்றோம் அம்மா
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும். எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.
அன்பு மகன் கலாரஞ்சன்
மருமகள் புஸ்பலதா
பேரப்பிள்ளைகள்
விபிக்க்ஷா மற்றும் ஹரிஸ்வி.
244, முனைவீதி
தம்பிலுவில்-01.