Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் பொங்கல் விழா மற்றும் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் பொங்கல் விழா மற்றும் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 2023ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தின் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (26/01/2023) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகள் காலைவேளையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று அதற்கான பூசை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்று அதனைத்தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தின் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

Check Also

அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *