Latest News
Home / ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இம்மாதம் 29, 30, 31ம் திகதிகளில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் பிரியர்களையும் இளந்தலைமுறை கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் மேலும் அவர்களுக்கு சிறந்த விளையாட்டு வழிகாட்டுதலுக்குமாக, நாற்பது வயதிற்கு மேற்பட்ட …

மேலும் வாசிக்க

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

 -ஹரிஷ்- ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணிமுதல் ஆலையடிவேம்பு , ஸ்ரீ முருகன் ஆலய மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”விளையாட்டினுடாக பாரபட்சமற்ற சமூக ஒற்றுமையினை மேன்படுத்தல்” எனும் நோக்குடன் குறித்த நிகழ்வுகள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். அன்றைய தினம் சீட்டிழுப்பின் மூலமாக பெறுமதி மிக்க …

மேலும் வாசிக்க

வெற்றிகரமாக இடம்பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு….

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்கள் தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் பூரண ஏற்பாட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) பதில் அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இன்றைய தினம் (20) வெற்றிகரமாக இடம்பெற்றது. கருத்தரங்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி …

மேலும் வாசிக்க

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் இணைந்து கல்வியல் கல்லூரியின் பொறுப்புமிக்க துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு எதிர்வரும் (20.03.2024) புதன்கிழமை அன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளவுள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம். …

மேலும் வாசிக்க

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற அம்பாள் பாலர் பாடசாலை, கனகதுர்க்கா, விவேகானந்தா, விநாயகர் என நான்கு பாலர் பாடசாலைகள் இணைந்து மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (15) பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், ஆலையடிவேம்பு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோத்தர் ஹரீமா, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திரு.மணிவண்ணன், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலை புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு….

 -ஹரிஷ், தனுசன்- அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கோமளம் துளசிநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (13) புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார், அன்னை சாரதா கலவன் பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் அவர்கள் கலந்துகொண்டதுடன். நிகழ்வில் பாடசாலை சமூகத்தினரும் கலந்து …

மேலும் வாசிக்க

பிரதேச மின் நிலைமாற்றிகளுக்கு (Transformer) நடக்கும் அட்டூழியம்….

ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் மின் நிலைமாற்றிகளில் (Transformer) காணப்படும் புவிக்கம்பி (Earth wire) இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூலமாக அறியக்கூடியக உள்ளது. புவிக்கம்பியினை வெட்டி அகற்றுவதனால் மின் பாவனையாளர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படக்கூடியதாக சாந்தப்பங்கள் அதிகளவாக ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள். மின் நிலைமாற்றிகளில் இருந்து புவிக்கம்பி அகற்றப்படுவது தொடர்பாக அனைவரும் விழிப்புடன் இருந்து இவ்வாறு அகற்றப்படுவதனை தடுத்து …

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சரோஜாதேவி ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வு…

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் லோ.சரோஜாதேவி (பவானி) ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து ஆசிரியருக்கு ஆசீர்வாதம் வழங்கியதோடு மாணவர்களுக்கு மகா சிவராத்திரியின் பெருமை பற்றி சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோளாவில் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், …

மேலும் வாசிக்க