அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (11) திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை இல்ல மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் …
மேலும் வாசிக்கஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!
மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் …
மேலும் வாசிக்கமின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக …
மேலும் வாசிக்கஅதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்!
இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் …
மேலும் வாசிக்கபரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை …
மேலும் வாசிக்ககைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உங்கள் …
மேலும் வாசிக்கமட்டக்களப்பில் கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெளிமாவட்ட வியாபாரிகள் கள்ளத் தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே 8 வியாபாரிகள் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை …
மேலும் வாசிக்கதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…
காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் திரு. ப.ரவிசந்திரன் (சங்கரி), செயலாளர் கங்கா, ரோசி மற்றும் மகேஸ்வரன் அனுசரணையில் முன்னைய நாள் மட்டு அம்பாரை திருமலை பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நேற்றய தினம் (07) நிவாரண உதவிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்கபொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை : ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வைபவ ரீதியாக காலை ஆரம்பமானது. இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களையும் நவீனமயப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
மேலும் வாசிக்கநாட்டில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள்
“சனச” திட்டத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் 200,000 குடும்ப அலகுகளின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. …
மேலும் வாசிக்க