அக்கரைப்பற்றினை சேர்ந்த இறைப்பணியில் அன்புத் தோழர்கள் கழகத்தினரினால் பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தியினை சிறப்பிற்கும் வண்ணம் மாபெரும் தாகசாந்தி நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க1976 ஆண்டு நண்பர்கள் குழாத்தினரால் இன்றைய தினம் இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு….
அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஆகிய 1976 ஆண்டு நண்பர்கள் குழாத்தினரால் இன்றைய தினம் (14) இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச்சுழல் பகுதிகளில் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…..
திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் செயற்பட்டுவரும் விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி. R.நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் வித்தியாலய விசேட கல்வி அலகில் (2022.06.10)ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று கோளாவிலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டன் நகரில் வசித்து வருபவருமான திரு. சத்தியமூர்த்தி ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவையாளரின் மனைவியின் …
மேலும் வாசிக்கஅருள்மிகு கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு பெருவிழாவின் நான்காம் நாள் சடங்குப் பூசையும் ஊர்சுற்று காவியம் பாடலும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது….
கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு சனிக்கிழமை (04.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.06.2022) திருக்குளிர்த்தி நிகழ்வும் இடம்பெற உள்ளது. அந்தவகையில் நேற்றய தினம் (08.06.2022) கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கின் நான்காம் நாள் சடங்குப் பூசையும் ஊர்சுற்று காவியம் பாடலும் மிகச் சிறப்பாக பெரும் திரளான பக்தர்கள் வருகையுடன் …
மேலும் வாசிக்கபிரதேச செயலாளரின் தலையீட்டில் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீண்டும் எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு…..
எரிபொருள் விலை இன்று இரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவலினைதொடர்ந்து அதிக நபர்கள் எரிபொருட்களை பெற்றுக்கொண்டதினால் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் முடிவடைந்தது அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் மாத்திரமே உள்ளது என கூறி எரிபொருள் வழங்கும் செயற்பாடு இடை நிறுத்தப்பட்டது. எனினும் பலர் அங்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருந்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து எரிபொருள் நிரப்பு …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தினருக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கை….
M.கிரிஷாந் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் ஒரு சில நாட்களின் பின்னர் நேற்றய தினம் (02/06) வாடிக்கையாளர் நபர் ஒருவருக்கு சீனி ஒரு கிலோகிராம் எனும் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது. குறித்த ஒரு கிலோகிராம் சீனியினை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிலையத்தில் இருந்து மேலும் ஓர் எதாவது பொருள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் காணப்பட்டது. லங்கா சதொச நிலையத்தில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 177 …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு விஞ்ஞாபனம் !
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (09.06.2022) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி (05.04.2022) மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை (10.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்கு இடம்பெற இருப்பதுடன். (14.06.2022) செவ்வாய்க்கிழமை திருக்குளிர்த்தி சடங்கும் இடம்பெற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சிச் சடங்கு (15.06.2022) வெள்ளிக்கிழமை இனிதே நிறைவடையும். அனைத்து சைவப்பெருமக்களும் …
மேலும் வாசிக்ககமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபா உதவியுடன் மின் இணைப்பு பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலய பாடசாலைக்கான முழுவதுமாக ஒரு லட்சம் ரூபா (100,000.00/-) நிதி உதவியுடன் மின்சார வேலைகளும், மின் இணைப்பும் பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக அதன் ஸ்தாபகர் திரு.க.சத்தியமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நிர்மலன் அவர்களின் இத் திட்டத்திற்கான ஆதரவுடன் ஆரம்பமாகியுள்ளது. மேலும் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ …
மேலும் வாசிக்ககமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக ஒரு தொகை பெறுமதியான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கான உதவி வழங்கல் நிகழ்வு நேற்றய தினம் (27) அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக அதன் பணிப்பாளர் திரு.வே.வாமதேவன் அவர்களின் தலைமையில் பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி டேவிட் கஜேந்தினி அவர்களின் திருமண பதிவு நிகழ்வை முன்னிட்டு ஒரு தொகை பெறுமதியான கபட், வைற்போட், கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை!
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள …
மேலும் வாசிக்க