Latest News
Home / இலங்கை / நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது

நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,152 ஆக பதிவாகியுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 265 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 15 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4,203 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் மேலும் 130 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *