Latest News
Home / இலங்கை / இலங்கையை மோதல் களமாக மாற்ற பலர் முனைப்பு – வெளிவிவகார செயலாளர்

இலங்கையை மோதல் களமாக மாற்ற பலர் முனைப்பு – வெளிவிவகார செயலாளர்

நடு நிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலக முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் வலுவான நாடுகளின் செல்வாக்கின் மையத்தில் இலங்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பல தரப்பினர் தற்போது இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் என்றும் அதனை நாங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு அணிசேரா நாடாகவும் பக்க சார்பற்ற நாடாகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கான விளையாட்டிலிருந்து விலகியிருக்கவும் விரும்புவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அந்த பொறியில் தாங்கள் சிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

வெளிவிவகார கொள்கையிலிருந்து இலங்கை விலகிய ஒவ்வொரு தருணமும் தோல்வி அடைந்தமை மட்டுமன்றி அதன் முன்னேற்றம் குறைவடைந்து உள்நாட்டு மோதல்களில் சிக்குண்டது என்றும் வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டிற்கு பதில் இன்னொரு நாட்டினை தெரிவு செய்யும் நிலையில் இலங்கை இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *