Latest News
Home / இலங்கை / வேகமாக பரவும் வைரஸ் : மிக ஆபத்தான நிலையில் இலங்கை!!

வேகமாக பரவும் வைரஸ் : மிக ஆபத்தான நிலையில் இலங்கை!!

 

கோவிட் -19 வைரஸ் இலங்கைக்குள் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கை தற்போது கோவிட் 19 வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது.

வைரஸ் பரவல் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வழங்குவதில்லை. இது மிகவும் சிக்கலான நிலைமை எனவும் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *