தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்கள் தங்குவதற்கு என ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு பாடசாலையும் மற்றும் அக்கரைப்பற்று 7/4 கலாச்சார மண்டபமும் முகாம்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்திய பின் முகாம்களில் தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.