அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் இன்றைய தினம் (11) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த 700 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று – 7,7/2 ,7/3 ,7/4 , நாவற்காடு ,வாச்சிக்குடா, சின்னக்குளம், கோளாவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
இதற்கான நிதிப்பங்களிப்பை அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளான திரு.பகீரதன் மகேஷ்- லண்டன், கணேசபிள்ளை ரசீந்திரன் – அஸ்ரேலியா, திருமதி.சுகந்தா கந்தசாமி – அஸ்ரேலியா, திரு மில்ராஜ் குமார் – அஸ்ரேலியா , திரு.ஸ்ரீகாந்தன் – நோர்வே ,செல்வி. நிக்ஷ்சயா- அஸ்ரேலியா, திரு. கோவிஜன் – அஸ்ரேலியா அவர்கள் வழங்கி இருந்தார்கள் மேலும் பலரும் குறித்த செயற்பாட்டில் இணைந்து கொள்ள இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் களத்தில் இருந்து சிறப்பானதாக இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட கஜன், காந்தன், தனுர்சன், மிருஷாந், சுஜந்தன், கஸ்மிதான், கிரிஷாந் இயந்திரத்தினை வழங்கிய ராஜ் அவர்கள் குழுவினரும் மேற்கொண்டிருந்தார்கள் .
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளினால் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் அதிகளவான உணவுப் பொதிகள் வழங்க திட்டமிட்டிருப்பதும் சிறப்பிற்குரிய விடயமாக அமைந்திருக்கிறது.