Latest News
Home / இலங்கை / லவ்கலை பிரதேச தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனுக்கூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு …..

லவ்கலை பிரதேச தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனுக்கூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு …..

அம்பாறை மாவட்டம் லவ்கலை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கமு/திகோ/பாணமை அரசினர் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனுக்கூடாக இலண்டனில் வசிக்கும் திரு.எஸ்.ஜெயனாந்தம் அவர்களின் நிதி அனுசரணையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.எஸ்.பரிமளகாந்தன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா, செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர் திரு.க.ஜனார்த்தனன் செயற்றிட்ட ஆலோசகர்கள் திரு.க.தயாபரன், திரு.க.கணேசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *