Latest News
Home / இலங்கை / யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை க ஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீ ட்கப்பட்டன. எனினும் அதனைக் க டத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அந்தப் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது. அதனால் அங்கிருந்து க ஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு க டத்தி வருவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே இந்த நிலையிலேயே கஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் க ஞ்சா க டத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் கஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் த லைம றைவாகி இருப்பதனால் அவர் எங்கு இருக்கின்றார்…? அவருக்கு கொரோனா இருக்குமா…? அவரால் சமூகத்திற்கிடையில் பரவிவிடுமா…? என அ ச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *