Latest News
Home / இலங்கை / முழு ஊரடங்கு செய்தி – சிஐடி விசாரணை ஆரம்பம்!

முழு ஊரடங்கு செய்தி – சிஐடி விசாரணை ஆரம்பம்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொய்யானதும் போலியானதுமான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 17 ஆம் திகதி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அவர் கூறினார்.

அவ்வாறான செய்தியை இணையத்தளங்களில் பதிவேற்றிய நபர்களை கண்டுப் பிடித்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *