2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளையும் மற்றும் திருக்கோவில் வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் ரா.கதுராஜ் ஆலையடிவேம்பு பிரதேச மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
செல்வன் ரா.கதுராஜ் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்திலும் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றிருந்தார்.