Latest News
Home / இலங்கை / மாணவர்கள் உட்பட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

மாணவர்கள் உட்பட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

மாணவர்கள் உட்பட்ட 152 பேர் கம்பஹாவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை ஒன்றின் பௌதீக விஞ்ஞான ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புடையதாக கருதப்படும் 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹாவின் சுகாதார மருத்துவ அதிகாரி சுபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனதொற்றுக்கு உள்ளானார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடையதாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியை பிரத்தியேக வகுப்பில் கற்பித்ததாக கூறப்படும் 100 மாணவர்கள் மற்றும் அந்த வகுப்பின் 52 பணியாளர்கள் ஆகியோர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் மேலும் PCR பரிசோதனைகளுக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹாவின் சுகாதார மருத்துவ அதிகாரி சுபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *