Latest News
Home / இலங்கை / மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

க.பொ.த.சாதாரண தரம்  மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலை 7.30  மணிக்கு திறக்கப்படும் பாடசாலை மாலை 3.30 மணியளவில்  மூடப்படுமெனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கல்வி செயற்பாடுகள், சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சு  வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்தும்போது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு கல்வியமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *