மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றை இன்று (16) பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று பிற்பகல் 3 மணியளவில் கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் பனிச்சையடி பகுதியிலுள்ள பிரம்பு காட்டுபகுதியில் கைவிடப்பட்ட கைகுண்டு ஒன்றை மீட்டனர்.
குறித்த குண்டு பழுதடைந்துள்ளதால் நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கோண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-