Latest News
Home / இலங்கை / மட்டக்களப்பு பனிச்சையடி காட்டுப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு பனிச்சையடி காட்டுப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றை இன்று (16) பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று பிற்பகல் 3 மணியளவில் கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் பனிச்சையடி பகுதியிலுள்ள பிரம்பு காட்டுபகுதியில் கைவிடப்பட்ட கைகுண்டு ஒன்றை மீட்டனர்.

குறித்த குண்டு பழுதடைந்துள்ளதால் நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கோண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *