Latest News
Home / இலங்கை / மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாகரை மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் உட்பட 4 பேரும் ஆரையம்பதி, பட்டிருப்பு, வாழைச்சேனை, கோறளைப்பற்று , ஓட்டுமாவடியில் தலா ஒருவர் உட்பட 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் சிவப்பு வலயமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

எனவே மாவட்டத்தின் தொற்று அதிகரிப்பை கருத்திற்கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *