செல்வி வினாயகமூர்த்தி
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட ரொட்டை 26 கிராம சேவகர் பிரிவில் புதன்கிழமை (17) இரவு வேளையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகள்,மதில்கள்,வேலிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளன.வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 4 நெல்லு மூடைகளையும் உண்டு விட்டு சென்றுள்ளன. அந்தநேரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியொருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரொட்டைக்கிராமத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்ற நிலையில் இப்பகுதியில் பயிர்செய்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற இப்பிரச்சனையை நிவர்த்தி செய்து யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.