Latest News
Home / இலங்கை / புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?

புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது.

அரசாங்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாங்கள் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய்கூட புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற ஓர் எண்ணெய்யாகவும் இருக்கலாம்.

இதனை சில பரிசோதனைகள் மூலம் நாமே கண்டறியலாம். குறித்த தேங்காய் எண்ணெய் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கழிவு பதார்த்தங்களை கொண்டது என்பதை வீட்டில் செய்யும் சிறிய பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

முதலாவது பரிசோதனைப்படி, தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையை குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்து 2 மணிநேரத்தின் பின்னர் அதனை மீளவும் அவதானிக்க வேண்டும்.

இதன்போது அந்த தேங்காய் எண்ணெயில் இருந்து குமிழிகள் வெளியேறினால் நச்சு தன்மை அதிகமாக உள்ளது என்பது அர்த்தமாகும்.

இரண்டாவது பரிசோதனையின்படி, தேங்காய் எண்ணையை பயன்படுத்தி ஏதேனும் காய்கறிகளை சமைக்கும் போது அதனுள் சிறிய அளவு வெள்ளைப்பூடு எனப்படும் உள்ளியை சேர்க்கவேண்டும்.

அந்த வெள்ளை பூடு சிவப்பு நிறமாக மாறினால் அதில் குறிப்பிடத்தக்க அளவு நச்சுத்தன்மை இருக்கலாம்.

அது எந்த நிறத்துக்கும் மாறாமல் வெள்ளை நிறத்தில் இருந்தால் எந்தவிதமான நச்சுத் தன்மையும் கிடையாது என வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணையை குறித்த இரண்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமானதாகும்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *