சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறைநிறை தீர்க்கும் வீரயடி நாயகனாம் பொத்துவில் ரொட்டையில் வீற்ருக்கும் வீரயடி பிள்ளையார் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகமானது கடந்த 2023/07/09 திகதி இடம்பெற்று.
அதனை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலப்பூசை நிகழ்வுகள் இடம்பெற்று வந்தநிலையில் இன்றைய தினம் ரொட்டை வீரடிபிள்ளையாருக்கு 108 சங்குகளை கொண்ட சங்காபிஷேகமானதத்தின் பால் ஆனது பொத்துவில் ஏத்தம் ஸ்ரீ சாலம்பையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி ஊடாக பால் குடப்பவனியாக எடுத்துவரப்பட்டு ரொட்டை வீரையடிவி நாயகர் ஆலயத்திற்கு வந்தடைந்து வீரையடிபிள்ளையாருக்கு பால் அபிஷேகம் இடம்பெற்றது.
இன் நிகழ்வானது ரொட்டை கிராம மக்களின் அனுசரனையுடன் இடம்பெற்றதுடன் இவ் பால்குடபவனியில் பெரும் திரளான பக்த அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஜே.கே.யதுர்ஷன்