Latest News
Home / இலங்கை / பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையிலும், புலமைபரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்திலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *