Latest News
Home / இலங்கை / பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை தரம் 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் ஒகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐந்தாண்டு புலமைப்பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாணவர்களின் கோரிக்கை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *