Latest News
Home / இலங்கை / நாட்டில் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *